விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1 ஒத்திகை நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் – 3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தனது அடுத்த மிஷனில் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 சாட்டிலைட் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல் 1 விண்ணில் பாய உள்ளது.
இது சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் லட்சிய முயற்சியாகும். சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், குறித்து ஆய்வு செய்ய ஆதித்யா உதவும். சூரியனின் காந்தப்புலன்கள் பூமியில் தொலைத்தொடர்பு, ஜிபிஎஸ் மற்றும் மின் கட்டுமானத்தைப் பாதிக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாகும். ஆகையால், இந்த சூரியனில் இருந்து கிளம்பும் காந்தப்புலன்கள் குறித்து நாம் ஆய்வு செய்வது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்நிலையில், விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1 ஒத்திகை நிறைவைடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com