நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதன்பிறகு, விண்கலத்திலிருந்து ரோவர் வெளிவந்து அதன் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக சூரியனை ஆய்வு செய்வதற்கு ஆதித்யா L1 விண்கலம் செப்டம்பர் 2 ஆம் தேதி 11.50மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராகேட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.


மேலும், இந்த விண்கலம் திட்டமிட்ட இலக்கை 4 மாத பயணங்களுக்கு பிறகு சூரியனில் சேர்ந்து ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது. எப்பொழும் ராக்கெட் ஏவுவதை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிடுவதற்காக பார்வையாளர் மாடத்தை இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் அமைத்துள்ளது.
Also Read : தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை..! அமைச்சர் சொன்ன அந்த ஒரு பதில்!!
அதன்படி, ஆதித்யா L1 விண்கலம் ஏவப்படுவதை பார்க்க என்ற இணையதளத்தின் மூலம் முன் பதிவு செய்து ஏவுதல் நிகழ்வை நேரில் பார்வையிடலாம். மேலும், பதிவு செய்த பின்னர் இதற்கான அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in
