நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதாக 2011-ல் போலீஸில் புகாரளித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி. அதன் பிறகு, சீமான் தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருவதாகக் கூறிவந்த விஜயலட்சுமி, ஒருகட்டத்தில் சீமானுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

மக்களிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் விஜயலட்சுமி, தற்கொலை முயற்சிகூட செய்தார். அதன் பின்னர் நடவடிக்கை எடுப்பதாக போலீஸாரும் கூறியிருந்தனர். இப்படியிருக்க, ஆகஸ்ட் 28-ம் தேதி காலை 11 மணியளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகாரளிக்கப்போவதாகவும், தி.மு.க அரசு தனக்கு நீதி வாங்கித் தரும் என்று நம்புவதாகவும் விஜயலட்சுமி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் விஜயலட்சுமி நேற்று வீடியோவில் குறிப்பிட்டிருந்ததைப்போலவே, இன்று காலை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அதையடுத்து புகாரளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயலட்சுமி, “சீமானை உறுதியாக கைதுசெய்ய வைப்போம். உங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து எனக்கு ஆதரவாக இருங்கள்.

அவரைக் கைது பண்ணவைக்காமல் விட்டதுதான் பெரிய தவறு. அதனால், இப்போது கைதுசெய்ய வைப்பேன். அ.தி.மு.க அரசு இதில் பெரிய அளவில் விசாரணை நடத்தவில்லை. என்னிடம் விசாரணை நடத்தினார்களே தவிர, சீமானிடம் விசாரணை நடத்தவில்லை. தற்போது தி.மு.க அரசை நம்பி வந்திருக்கிறோம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com