அப்போது பேசிய பிரேமலதா, “கேப்டன் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்வேன். எந்த நோக்கத்துக்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த லட்சியத்தை நிச்சயம் வெல்வோம். 2024-ல் தே.மு.தி.க எம்.பி-க்கள் டெல்லிக்குச் செல்வது உறுதி. 2026-ல் தே.மு.தி.க ஆட்சி அமைப்பது உறுதி” என்றார்.

இந்த நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து தே.மு.தி.க வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”மருத்துவப் பரிசோதனையில் கேப்டனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வென்டிலேட்டர் சிகிச்சையளிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் மருத்துவமனை பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. விஜயகாந்த் உடல்நலம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
