கர்நாடகா லோக் ஆயுக்தா கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் சசிகலா, இளவரசி 2 பேரையும் கைது செய்ய கர்நாடக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர், “சசிகலா, இளவரசி தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த லோக் ஆயுக்தா-வின் வழக்கை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவை முன்னிட்டு லோக் ஆயுக்தா விசாரணைக்கும், நேரில் ஆஜராகுவதற்கு விலக்கு வாங்கப்பட்டுள்ளது.


மேலும், எங்களின் மனு நிலுவையில் இருக்கும் போது எப்படி பிடிவாரண்ட் பிறப்பிக்க முடியும்… இது அதிர்ச்சி அளிக்கிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தடை இருக்கும் போது, எப்படி லோக் ஆயுக்தா விசாரிக்க முடியும் என லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், லோக் ஆயுக்தா நீதிமன்றத்தின் பிடி வாரண்ட் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் இன்று முறையிடுவதற்கான நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com