பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் இருந்த நிலையில் பல சங்கங்கள் இழுத்து மூடும் நிலை உருவாகியுள்ளது. திமுக அரசு வந்த புதிதில் 3 ரூபாய் விற்பனை விலையை குறைத்தனர். இதன் மூலம் ஆவினுக்கு 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக பால் கொள்முதலை விரிவுபடுத்த முடியவில்லை.
கடந்த ஆண்டு நீண்ட போராட்டம் நடத்தியதற்குப்பின் பால் கொள்முதலுக்கு 3 ரூபாய் மட்டுமே உயர்த்தினார்கள். லிட்டருக்கு 10 ரூபாய் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.


வண்டிகளில் ஏற்றும்போதே பாலின் தன்மைகளை ஆய்வு செய்து பால் உற்பத்தியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும், ஆவினுக்கு கொண்டு வரும் வழியில் தண்ணீர் கலக்கப்படுவதால் உற்பத்தியாளர்களுக்கும், சங்கத்தினருக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 17,18,19 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆவின் அலுவலகங்களிலும், கலெக்டர் அலுவலகங்களிலும் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
பாலின் தன்மை அடிப்படையில் கொள்முதல் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார், அது ஏமாற்று அறிவிப்பு, உண்மை இல்லை.
தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 90 சதவிகித பால் உற்பத்தியாளர்களின் பாலில் இந்த சத்துகள் கிடைக்க வாய்ப்பு இல்லை. 8.0 எஸ்எல்எப், 4.0 கொழுப்பு என்ற சத்து மட்டுமே உள்ளது, இல்லாத சத்திற்கு அமைச்சர் விலையை அறிவிக்கிறார்.
எருமை மாடுகள், நாட்டு மாடுகளிடம் மட்டுமே இருந்த, இது போன்ற சத்துக்கள் 1990 க்கு பின் அழிந்துவிட்டது. இப்போது தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலில் கலப்பின மாடுகளைத்தான் அனைவரும் வைத்துள்ளனர்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com