டெல்லி மாநிலம் நேதாஜி சுபாஷ் பிளேஸ் பகுதியில், 85 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் புகாரளித்த நிலையில், ஆகாஷ் என்ற நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் அந்த மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆகாஷ் என்ற 28 வயது இளைஞர், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், அவர் அந்த மூதாட்டியை தாக்கியதாகவும், பிளேடால் அந்த மூதாட்டியின் உதடுகளை வெட்டியதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் அந்த மூதாட்டிக்கு அவருடைய பிறப்புறுப்பு மற்றும் முகத்தில் பயங்கரமாக காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியான ஒரு நோட்டீஸில் DCW தலைவர், டெல்லி காவல்துறையிடம் வழக்கு தொடர்பான மற்ற விவரங்களுடன் முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) நகலை தனக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த இளைஞரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த மூதாட்டியின் உடல் நலம் தற்போது எவ்வாறு உள்ளது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com