தமிழக அரசின் கீழ் பல்வேறு அரசுத் துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமாகத்தான் நிரப்பட்டு வருகிறது. இதில், அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1 , குரூப் 2, குரூப் 4 என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வில் வெற்றி பெரும் பயனாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள்.

இந்நிலையில், TNPSC தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு பொதுத் துணை பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் ஜூனியர் புனர்வாழ்வு அலுவலர் பதவி காலியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, இப்பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டது. இந்த நேரடி ஆட்சேர்ப்பில் தற்காலிமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Also Read : ஓலா, உபேர் ஓட்டுனர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்..! என்ன ஆச்சி? எதுக்கு இந்த ஸ்டிரைக்?
மேலும், இதில் சில விண்ணப்பதாரர்களின் ஆவணங்களின் ரசீது ஏற்றுக்கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ளதால் இவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் TNPSC தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த முடிவை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
நன்றி
Publisher: jobstamil.in