
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு ஏதாவது ஒரு அத்தியாவசிய பொருளின் விலை உயர்ந்து கொண்டேதான் செல்கிறது. அந்த வகையில், தற்பொழுது அரிசியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அரிசியின் விலை உயர்ந்த காரணத்தினால் தான் மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தது. இதனால் வெளிநாடுகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த ஆண்டு அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அரிசியின் விலை சற்று குறைய தொடங்கியது.
Also Read > தனுஷின் “ராயன்” படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா..! இணையத்தில் வைரலாகி வரும் போஸ்டர்!!
இந்நிலையில், தற்பொழுது கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் நெல் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் சன்ன அரிசியின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டெல்டா மாவடடங்களிலும் நெல் விளைச்சல் குறைந்து காணப்படுவதால் அரிசியின் விலை மேலும் உயர்வுக்கு காரணமாக உள்ளது.
அரிசியின் விலை குறித்து வணிகர்கள் கூறுகையில், இந்த ஆண்டு முழுவதும் அரிசியின் விலை குறைய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர். கடந்த 4 மாதங்களில் மட்டும் இட்லி அரிசி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாயும், சன்ன ரக சாப்பாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.12 முதல் ரூ.14 வரையிலும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in