இன்றைய காலக்கட்டத்தில் UPI என்ற டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பணத்தை அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது, பில் கட்டணம் செலுத்துவது, ஷாப்பிங் செய்வது, ஆர்டர் செய்வது போன்ற அனைத்து வேலைகளையும் சுலபமாக செய்துவிட முடிகிறது. UPI எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நாம் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். இந்த UPI டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கையில் காசு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்பொழுது உள்ள காலநிலையில் கிராமங்களில் இருக்கும் சிறிய கடைகளில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், UPI மூலம் பணபரிவர்த்தனை செய்வதை ஒவ்வொரு மாதமும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) மதிப்பீடு செய்து வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் முதல் முறையாக ரூ.15,000 பில்லியனுக்கும் மேலாக 10 பில்லியன் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளை கடந்து புதிய சாதனையை இந்தியா அடைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு ரூ.15,184 பில்லியனுக்கும் என்று தேசிய கொடுப்பனவு கழகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Also Read : நம்ப ஆயில் இந்தியா லிமிடெட்டில் வேலை அறிவித்துள்ளது! மாதம் சம்பளம் இவ்வளவு தெரியுமா?
கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் முதன்முறையாக 1 பில்லியன் மாதாந்திர பரிவர்த்தனைகளை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2018 ஆம் ஆண்டில், யூபிஐ பரிவர்த்தனைகளின் அளவு 374.63 கோடியாக இருந்த நிலையில், தற்பொழுது 2022 ஆம் ஆண்டு வரை 1,876 சதவீதம் அதிகரித்து 7,403.97 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in