திருநெல்வேலி மாவட்டத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் மனைவி, தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டதால், கதறும் காதல் கணவர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த சரவணகுமார், அமுதா தம்பதியினர் வெகு நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர், இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஒன்றாக வசித்து வந்தனர்.
என்னதான் காதலித்தவரின் கையைப் பிடித்துக் கொண்டு, அவரோடு வந்துவிட்டாலும், அமுதா, பெற்றோரின் நினைப்போடு இருந்துள்ளார். அந்த வருத்தம், கணவர், உடன் இருக்கும்போது, பெரிதாக அமுதாவிற்கு தெரியாது. ஆனால், அவர் வெளியே செல்லும் சமயத்தில், அமுதா தனியாக இருப்பதால், பல்வேறு சமயங்களில் பெற்றோரை நினைத்து அவர் அழுததாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் தான், சரவணகுமார் வேலைக்கு சென்று விட்ட நிலையில், மனமுடைந்து காணப்பட்ட அமுதா, திடீரென்று ஒரு அதிர்ச்சி முடிவை மேற்கொண்டார்.அதாவது, அவர், செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்த கடிதத்தில், என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்று தெரிவித்திருந்தார், வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்த சரவணகுமார், தன்னுடைய இளம் மனைவி, பிணமாக கிடப்பதை கண்டு, கதறி அழுதுள்ளார். குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நன்றி
Publisher: 1newsnation.com