நாளை தமிழகம் வரும் பிரதமர் வருகையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம்!

நாளை தமிழகம் வரும் பிரதமர் வருகையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம்
நாளை தமிழகம் வரும் பிரதமர் வருகையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம்! 2

சென்னையில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி நடக்க உள்ளது. இளைஞர்களுக்கான இந்த விளையாட்டு போட்டியானது நாளை தொடங்கி இந்த மாதம் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் பல மாநிலங்களில் இருந்தும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். சென்னையில் நடைபெற உள்ள ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதால் அதற்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாய் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த விழாவில் கவர்னர் ஆர். என்.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அவருக்கு சென்னை விமான நிலையத்திலேயே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பிரதமர் மோடி வருகையொட்டி பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *