திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களில் கூட்டுறவு வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்ட போலி கணக்குகள் கழிக்கப்பட்ட உரிய பயனாளர்கள் இறுதி செய்யப்பட்டன. இதனால், நிதித்துறைக்குப் பல லட்சம் மிச்சமானது. தற்போது இதையும் சாத்தியப்படுத்தியது அந்த சேமிக்கப்பட்ட டேட்டாக்கள் தான். எனவே, அரசு பெற்ற உரிமைத்தொகை விண்ணப்பத் தகவல் மற்றும் ஏற்கனவே சேமிக்கப்பட்ட தரவுகளை ஒப்பிட்டு, தகுதிவாய்ந்தவர்கள் இறுதி செய்யப்பட்டிருக்கின்றனர்.


விண்ணப்பித்த பலரும் அரசுக்கு நாம் என்ன வேலையில் இருக்கிறோம், வீடு இருக்கிறதா என்பது தெரியவா போகிறது என விண்ணப்பங்களில் தவறான தகவலைப் பதிவு செய்துள்ளனர். தோராயமாக 3 லட்சம் விண்ணப்பதாரர்கள் அரசு ஊழியர்கள். 30 லட்சம் விண்ணப்பதாரர்கள் வரி செலுத்துபவர்கள். மேலும் 10 லட்சம் பேர் போலியான தகவலைப் பதிவு செய்துள்ளனர். இந்த அடிப்படியில், இந்த 57 லட்ச விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எந்தக் காரணத்தினால் விண்ணப்பங்கள் தேர்தெடுக்கப்படவில்லை என்னும் முழுமையான தகவல் விரைவில் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு “Accepted” என குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு சோதனை முறையாக ரூ.1 அனுப்பப்பட்டு, திட்டம் தொடங்கிய பின்னர் முழுத் தொகை கணக்குகளில் செலுத்தப்படும். ” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com