குமரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்டிருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாள்களாக ரெட் அலர்ட் நீடிக்கிறது. இந்த கனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால், ரயில் பாதைகள் தண்ணீரில் மூழ்கியிருக்கின்றன.

குறிப்பாக, தூத்துக்குடி ரயில் நிலையம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்ததால், சுமார் 800 -1,000 பயணிகள் ரயில் நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர். இந்த நிலையில், ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகள் குறித்தும், அவர்களை மீட்பது குறித்தும் மதுரை ரயில்வே கோட்டம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
