மூன்று மகள்களை கழுத்தை அறுத்துவிட்டு, தந்தையும், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம், கோட்டயம் ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜோமோன். இவருடன், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சென்ற ஒரு வருடத்திற்கு முன்னர், இவருடைய மனைவி, இவரை விட்டு, பிரிந்து சென்று விட்டார். இதனால், ஜோமோன் தன்னுடைய மகள்கள், அனன்யா, அனாமிகா, அமேயா உள்ளிட்டோருடன் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான், நள்ளிரவு நேரத்தில், ஜோமோன் தன்னுடைய 3 மகள்களின் கழுத்தை கத்தியால் அறுத்து, கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். அதன் பிறகு அறைக்குள் சென்று, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தந்தையால், கழுத்தறுக்கப்பட்ட மூன்று சிறுமிகளும், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். அக்கம் பக்கத்தில், இருந்தவர்கள் இதைக் கண்டு, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகளையும், மீட்டு, மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதோடு, அந்த சிறுமிகளின் தந்தையின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மூன்று குழந்தைகளையும், கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினர் விசாரணையில், தெரியவந்துள்ளது.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியின் காரணமாக, இந்த முடிவை அவர் மேற்கொண்டு இருக்கலாம் என்று காவல்துறையினர் நினைக்கிறார்கள். இது தொடர்பாக, ஜோமோனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் காவல்துறையினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற மூன்று சிறுமிகளும் கவலைக்கிடமான நிலையில், இருப்பதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 3 மகள்களின் கழுத்தை அறுத்துவிட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நன்றி
Publisher: 1newsnation.com