கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இரு அமைப்புக்கும் இடையே நடைபெறும் போரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளனர். இதனால், அங்கு போர் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் இந்தியாவை சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களை பாதுகாக்கப்பாக இந்தியா அழைத்து வர அரசு பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு குடிமக்களை இஸ்ரேலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்கா, டென்மார்க், பின்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலில் வசித்து வரும் மற்ற நாட்டு மக்களை வெளியேற செய்யும் வகையில், இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் என்ற விமான நிலையத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்பொழுது இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு ஆபரேசன் அஜய் என்று பெயரிட்டுள்ளனர்.
Also Read : இனிமே வெயிலுக்கு பாய் பாய் சொல்லுங்க… சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!
ஆபரேசன் அஜய் திட்டத்தின் முதற்கட்ட பணியில், கடந்த வெள்ளிக்கிழமை விவானம் மூலம் இஸ்ரேலில் இருந்து 211 இந்தியர்கள் இந்தியா வந்தடைந்தனர். அதனையடுத்து, 2 வது சிறப்பு விமானம் மூலம் 235 இந்தியர்கள் இந்தியாவுக்கு வந்தனர். அதன்பின், 274 இந்தியர்கள் அடங்கிய 4 வது விமானம் இஸ்ரேலில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) வந்தடைந்தது. இவர்களை மத்திய மந்திரி வி.கே. சிங் வரவேற்றார்.
நன்றி
Publisher: jobstamil.in