திரைப்படங்களுக்கு சிறப்புக்காட்சி அனுமதி வழங்கிய பின்னர், குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது முறை கிடையாது. தற்போது திரைத்துறை முடங்கி உள்ளதாக அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். 2006 முதல் 2011 வரை ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திரைத்துறை இருந்தது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் திரைத்துறை முடங்கியே இருந்தது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெளிப்படையான நிர்வாகத்தினால் திரைத்துறை நல்ல முன்னேற்றத்தை பெற்றது.


தமிழ் சினிமாவில் இதுவரை சுமார் 200 திரைப்படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிக்கிறார்கள். இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸின் ஆதிக்கம்தான். அதனுடைய உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று அமைச்சராக உள்ளார். அரசு, நடிகர்களிடையே பாரபட்சம் பார்க்கக் கூடாது. முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பாரபட்சம் காட்டப்படவில்லை. அனைவரும் சமமாகவே பார்க்கப்பட்டனர்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com