20 வயதிற்குட்பட்டவர்கள் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விடுவது கடினம்!… 30% பெண்கள்!… ஆய்வில் அதிர்ச்சி!

20 வயதிற்குட்பட்டவர்கள் சிகரெட்  பிடிக்கும் பழக்கத்தை விடுவது கடினம்!… 30% பெண்கள்!… ஆய்வில் அதிர்ச்சி!

பல நாடுகளில் புகையிலை வாங்குவதற்கான சட்டப்பூர்வ வயது 18 ஆண்டுகள் ஆகும், சில நாடுகளில் வயது வரம்புகள் இல்லை. இந்தநிலையில், சிகரெட் வாங்குவதற்கான சட்டப்பூர்வ வயதை 22 வயது அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்தவகையில், புதிய ஆய்வின்படி, மக்கள் வயதாகும்போது போதைப் பழக்கத்தை விட்டுவிடுவது எளிதாகிறது. தினமும் சிகரெட் பிடிக்கும் பெரியவர்களில் 10 பேரில் 9 பேர் முதலில் 18 வயதிற்குள் புகைபிடிக்க முயற்சிப்பதாகவும், 99 சதவீதம் பேர் 26 வயதிற்குள் புகைபிடிக்க முயல்வதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இளமைப் பருவத்தில் கூட, ஆரம்பத்தில் புகைபிடிப்பதைத் தொடங்குவது அதிக நிகோடின் சார்புநிலையுடன் தொடர்புடையது என்று முடிவுகள் காட்டுகின்றன, மேலும் தாமதமாகத் தொடங்குபவர்களுடன் ஒப்பிடும்போது ஆரம்பத்தில் ஆரம்பிப்பவர்கள் அந்தப் பழக்கத்தை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. புகையிலை வாங்குவதற்கான சட்டப்பூர்வ வயதை 22 அல்லது அதற்கு மேற்பட்ட வயதாக உயர்த்தினால், நிகோடினுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறையலாம் மற்றும் மோசமான உடல்நல பாதிப்புகள் அபாயம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், 20 வயதுகுட்பட்டவர்களில் 30 சதவீதம் பெண்கள் சிகரெட் பிடிக்கின்றனர் என்றும் அதிகபட்சமாக ஒருநாளை 22 சிகரெட்கள் பிடிக்கின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *