இன்று, நாடாளுமன்ற மக்களவைக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பாதுகாப்புக் குறைபாட்டால் நடந்திருக்கும் ஒரு சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென, எம்.பி-க்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் மேசைமீது குதித்து முன்னோக்கி ஓடத் தொடங்கினர். அதோடு, ஒருவித மஞ்சள் நிற புகையை அவர்கள் அவைக்குள் பரப்பினர்.
#WATCH | An unidentified man jumps from the visitor's gallery of Lok Sabha after which there was a slight commotion and the House was adjourned. pic.twitter.com/Fas1LQyaO4
— ANI (@ANI) December 13, 2023
பின்னர், அங்கிருந்த எம்.பி-க்கள் உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதேநேரத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியே ஓர் ஆண், ஒரு பெண் என இருவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும், உள்ளே பரப்பிய அதே வண்ணப் புகையை வெளியே பரப்பினர்.
#WATCH | Delhi: Two protestors, a man and a woman have been detained by Police in front of Transport Bhawan who were protesting with colour smoke. The incident took place outside the Parliament: Delhi Police pic.twitter.com/EZAdULMliz
— ANI (@ANI) December 13, 2023
உடனடியாக, பாதுகாவலர்கள் அவர்கள் நான்கு பேரையும் கைதுசெய்து, தனியாக அழைத்துச் சென்று விசாரிக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகைய திடீர் சம்பவத்தால், நாடாளுமன்றப் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. காரணம், மக்களவையில் பார்வையாளர்களால், பல்வேறு கட்ட கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே நுழைய முடியும்.
அதேசமயம், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் தனிநாடு கோரிக்கையை முன்வைக்கும் குர்பத்வந்த் சிங் பன்னுன், “இந்திய ஏஜென்சிகளால் என்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. என்னைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டியதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, டிசம்பர் 13 அல்லது அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைத் தாக்குவோம்” என வீடியோ ஒன்றை இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதேபோல், 2001-ல் இதே டிசம்பர் 13-ல்தான், லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்தினர். இதில், தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் படங்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே வைக்கப்பட்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 2001-ல் ஏற்கெனவே நடந்த தாக்குதல், காலிஸ்தான் ஆதரவாளரின் மிரட்டல் வீடியோ என டிசம்பர் 13-ஐச் சுற்றி இத்தனை எச்சரிக்கைகளுக்கு மத்தியில், இத்தகைய சம்பவம் நடந்திருப்பது, நாடாளுமன்றப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மிகவும் தீவிரப்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்!
நன்றி
Publisher: www.vikatan.com