கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து…! 19 வயது பெண்ணை கூட்டாக நாசம் செய்த ஆண் நண்பர்கள்… குடியிருப்பில் நடந்த கொடூரம்.!

38 வயது பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம் … நட்பாக பழகிய நபர் செய்த வன்கொடுமை.!

மும்பையில் 19 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் தனது பெற்றோருடன் பாபா அணு ஆராய்ச்சி மைய குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார். இவரது தந்தை அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றுகிறார். அதே அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் மற்றொரு நபரின் மகனுடன் இந்தப் பெண்ணிற்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சம்பவம் நடத்த தினத்தன்று குறித்த இளம் பெண் சமையல் பொருட்கள் வாங்குவதற்காக தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது நண்பருடன் வேறொரு நபரும் இருந்திருக்கிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து சுய நினைவு தெரிந்ததும் தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்த அந்த பெண் தனது நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் தனது வீட்டை அடைந்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையிடம் அவர் புகார் அளித்ததை தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு மிக்க பாபா அணு ஆராய்ச்சி மைய குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *