ஆண்டாள் திருப்பாவை 25 | பக்தனின் சேவகனைப் போற்றுவோம்..!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

தீங்கு நினைத்தாலும் தீவினை புரிந்தாலும் அதற்கான தண்டனை நிச்சயம். கண்ணனின் மாமன் கம்சன், தனது சகோதரி தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து அன்று அஞ்சினான். உடனே தேவகி, அவளது கணவர் வசுதேவர் இருவரையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்கு எட்டாவது குழந்தையாக கண்ணன் சிறையில் அவதரித்து, கம்சனுக்குத் தெரியாமல் வசுதேவரால், ஆயர்பாடியில் யசோதைக்கு அருகில் சேர்க்கப்பட்டான். யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு சிறை திரும்புகிறார் வசுதேவர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *