மொகாலி: நடப்பு சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பரோடோ அணியை 20 ரன்களில் வீழ்த்தியது பஞ்சாப் அணி. இதன் மூலம் முதல் முறையாக இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அன்மோல்பிரீத் சிங் விளாசிய சதம் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவியது.
சண்டிகரில் உள்ள மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பரோடா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அன்மோல்பிரீத் சிங், 61 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். 10 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். நேஹல் வதேரா, 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in