திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் வளாகத்தில் இந்த ஆண்டு தீபத் திருவிழா தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரிஷப், இந்து சமய அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ‘‘அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா வரும் நவ. 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. நவ. 26-ம் தேதி மகா தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்தாண்டு தீபத் திருவிழாவுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி சார்பில் 13 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். கிரிவலப்பாதை மற்றும் நகரப்பகுதிகளில் சாலை பணிகள், தூய்மைப் பணிகள், குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
நன்றி
Publisher: www.hindutamil.in