
லக்னோ: லக்னோவில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கையை ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பவுலிங்கில் ஆடம் ஜம்பா, கமின்ஸ், ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோல், பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ் 51 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 52 ரன்களை விளாசினார். இவரது ஆட்டம் ஆஸ்திரேலிய வெற்றியின் ஒரு பளீர் அம்சம். ஏனெனில் மற்றபடி ஆஸ்திரேலியாவின் வெற்றி ஆஸ்திரேலிய வெற்றி போலவே இல்லை என்பதுதான் விஷயம்.
மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் அரைசதம் கண்டார். ஆனால் கட் ஷாட்டில் ஒரு பந்தை டீப் பாயின்டில் தட்டி விட்டு சமிக கருணரத்னே த்ரோ பவரை குறைவாக எடைபோட்டு 2வது ரன்னிற்கு ஓடினார். ஆனால் சமிகாவின் த்ரோ துல்லியமாக வர, மெண்டிஸ் பந்தைப் பிடித்து ரன் அவுட் செய்தார். மார்ஷ் அவுட் ஆனது இலங்கைக்கு பெரிய நிம்மதியைக் கொடுத்தது. காரணம், பவர் ஷாட்களாக ஆடிக்கொண்டிருந்தார் மார்ஷ்.
நன்றி
Publisher: www.hindutamil.in
