நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநியில் 9 நாட்களுக்கு தங்க ரதம் நிறுத்தம்

பழநி: நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் அக்.15 முதல் அக்.23-ம் தேதி வரை தங்கரதப் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி விழா அக்.15-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. இதேபோல், பழநி முருகன் கோயிலின் உப கோயிலான பெரிய நாயகியம்மன் கோயிலிலும் அக்.15 முதல் அக்.23-ம் தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பக்திச் சொற்பொழிவு நடைபெற உள்ளன.

பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். நவராத்திரி விழாவை முன்னிட்டு அக்.15 முதல் அக்.23 வரை 9 நாட்களும் தங்க ரதப் புறப்பாடு நடைபெறாது. அக்.24 முதல் தங்கரதப் புறப்பாடு நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *