
ஐசிசி உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கும் போது நிச்சயம் பிட்ச்கள் இந்திய அணியின் ‘ஹோம் அட்வான்டேஜ்’ சாதகத்துடன் அமைக்கப்படும் என்பது தெரிந்ததே. ஆனால், அந்த உத்தியை ஆஸ்திரேலியா இங்கு சமீபத்தில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரிலும் செய்திருந்தால் இங்கு விளையாடுவதற்கான சூழ்நிலைமைகளை அவர்களுக்குக் கொடுத்ததாக அமைந்திருக்கும். ஆனால், அப்படியெல்லாம் செய்தால் அது நேர்மறையானதாகி விடுமல்லவா?
ஆகவே, ரன்களை விளாசித் தள்ளும் பிட்ச்களை அந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் போட்டு அவர்களது கவனத்தைத் திசை திருப்பி இப்போது வழக்கமான இந்தியப் பிட்ச்சான ‘ஸ்லோ அண்ட் லோ’ என்பார்களே அதாவது பந்துகள் பிட்ச் ஆகி தாமதமாக பேட்டுக்கு வருவதோடு தாழ்வாகவும் வரும் பிட்சை அமைத்தார்கள். இதில் ஆஸ்திரேலியா படுதோல்வி கண்டது. இதனை அவரவர் கருத்தியல்களுக்கு ஏற்ப ‘உத்தி’, ‘தந்திரம்’, ‘சாமர்த்தியம்’, ‘புத்திசாலித்தனம்’ என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். ஏனெனில் ‘இந்திய அணி தவறேதும் செய்து விடவில்லை.’
நன்றி
Publisher: www.hindutamil.in
