Asian Games 2023 | வில்வித்தையில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஜோதி சுரேகா!

ஹாங்சோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை மகளிர் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் ஜோதி சுரேகா. 149 புள்ளிகள் பெற்று தென் கொரிய வீரங்கனையை பின்தள்ளி அவர் தங்கம் வென்றார்.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இந்தியா மொத்தமாக 97 பதக்கங்களை வென்றுள்ளது. ஜோதி சுரேகா, நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மட்டும் 3 தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் வெல்வதற்கான தனிநபர் போட்டியில் தொடர்ச்சியாக 4 முறை 30 செட் புள்ளிகளை அவர் பெற்றிருந்தார். இதே பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் அதிதி.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *