ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பருல் சவுத்ரி பந்தய தூரத்தை 15:14.75 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். பந்தயத்தின் கடைசி சில மீட்டர் தூரத்தில் ஜப்பானின் ரிகிகா ஹிரோனகாவை முந்தி அசத்தினார் பருல் சவுத்ரி.
மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி 62.92 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு வரலாற்றில் மகளிர் ஈட்டி எறிதலில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in