சென்னை: அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம், 100 ஏழைக் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு ரூ.1 கோடி நிதியை கலாநிதி மாறன் மனைவி காவேரி கலாநிதி வழங்கினார்.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் ரூ.600 கோடியை வசூலித்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி மகிழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிக்கு காசோலையுடன், BMWX7 கார் ஒன்றை பரிசளித்தார். தொடர்ந்து இயக்குநர் நெல்சனுக்கு காசோலையும் Porsche காரையும் வழங்கினார். இதேபோல அனிருத்துக்கும் காசோலை + கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிஇஓவும், கலாநிதி மாறனின் மனைவியுமான காவேரி கலாநிதி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் 100 ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.1 கோடி ரூபாய் நிதியை அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியிடம் வழங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை சன்பிக்சர்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஜெயிலர் சக்சஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
On behalf of Sun Pictures, Mrs. Kavery Kalanithi handed over a cheque for Rs.1 Crore to Dr. Prathap Reddy, Chairman, Apollo Hospitals, towards heart surgery for 100 under privileged children.
#Jailer #JailerSuccessCelebrations pic.twitter.com/o5mgDe1IWU
— Sun Pictures (@sunpictures) September 5, 2023
நன்றி
Publisher: www.hindutamil.in
