‘பயணிகள் கவனிக்கவும்’ இயக்குநரின் அடுத்த படைப்பு ‘அலங்கு’ முதல் தோற்றம்

‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘அலங்கு’. இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகி இருக்கும் திரைப்படம்தான் ‘அலங்கு’. கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும் , தமிழக பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம். அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத், சரத் அப்பானி, காளிவெங்கட், குணாநிதி உள்பட பலர் நடிக்கின்றனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *