தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாள் அன்று தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான விண்ணப் பணிகளுக்கான சிறப்பு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம் மூலம் சுமார் 1 கோடியே 65 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போழுது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்த நிலையில், இறுதி பட்டியியல் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டப்பின் பேசிய தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள், தகுதியான அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
Also Read : 9 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த அதிய சிறுவன்..! சற்றுமுன் வெளியான திடுக்கிடும் தகவல்!!
முன்னதாக ஒரு கோடி பெண்களுக்கு மட்டுமே அரசின் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது தகுதியான பெண்கள் ஒரு கோடிக்கும் மேல் இருந்தால் அவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நன்றி
Publisher: jobstamil.in