ராகு கேது பெயர்ச்சி..!! இந்த 4 ராசிக்காரர்களுக்கும் இனி ராஜயோகம் தான்..!! பணம் கொட்ட போகுது..!!

ராகு கேது பெயர்ச்சி..!! இந்த 4 ராசிக்காரர்களுக்கும் இனி ராஜயோகம் தான்..!! பணம் கொட்ட போகுது..!!

ராகுவும் கேதுவும் மீன ராசிக்கும் கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்து விட்டன. 18 மாதங்கள் இந்த கிரகங்கள் பல ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றன. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம் : ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. யோசிக்கவே வேண்டாம் தலைமேல் அமர்ந்திருந்த ராகு விலகி விட்டார். இனி நினைத்த காரியம் நிறைவேறும். கெட்டதெல்லாம் விலகும். இனி நல்லது மட்டுமே நடக்கப்போகிறது. நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். கடன் தொல்லைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

ஒன்றரை ஆண்டுகளில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். பிரிந்தவர்கள் இணைவார்கள். சித்திரைக்குப் பிறகு நல்லதே நடக்கும். முகத்தில் பொலிவு கூடும். வெற்றியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களுக்கு ராஜயோகம் ஆரம்பித்து விட்டது. உளுந்து தானம் கொடுக்கலாம். பத்ரகாளி அம்மனை வழிபடுங்கள்.

ரிஷபம் : பூர்வ புண்ணிய கேது பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடைபெறும். தொட்டது துலங்கும். பங்கு சந்தையில் பல மடங்கு லாபம் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டின் மீது விழப்போவதால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கப்போகிறது. சமயபுரம் மாரியம்மனை வழிபடுங்கள்.

மிதுனம் : ராகு பகவான் தொழில் ஸ்தானத்திலும் கேது சுக ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் வீடு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கப்போகிறது. சொந்த தொழில் தொடங்கும் யோகம் வரப்போகிறது. கடந்த கால கஷ்டங்களில் இருந்து விடிவுகாலம் பிறக்கும். பேரும் புகழும் தேடி வரும். சொந்த பந்தங்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வேலை செய்யும் இடத்தில் உதவிகள் தேடி வரும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஸ்ரீகாளஹஸ்தி சென்று ஸ்ரீ ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரரை வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

கடகம் : சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி முடிந்து அஷ்டம சனியில் நொந்து போய் அமர்ந்திருக்கிறீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றப்போகிறது. ராகு 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் செல்வ வளம் பெருகும். சேமிப்பு கைகூடி வரும். தொட்டது துலங்கப்போகிறது. மிகப்பெரிய ராஜயோகத்தை தரப்போகிறது. முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்வதால் பதவி அதிகாரம் தேடி வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தடைகள் உடையப்போகிறது. முதலீடு செய்த பணம் இரட்டிப்பு லாபத்தை தரும். பண விவகாரங்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்கப்போகிறது. ஏப்ரல் மாதத்தில் குரு பெயர்ச்சி லாபத்தை தரப்போகிறது. அஷ்டம சனியினால் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கப்போகிறது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு ராஜயோகத்தை தரப்போகிறது. பவுர்ணமி நாட்களில் குல தெய்வத்தை வழிபடுங்கள் குறைகள் நீங்கும்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *