`மகப்பேறு காலத்தில் கணவருக்கு விடுமுறை அளிப்பதை சட்டமாக்குவது அவசியம்’ – உயர்நீதிமன்றம் கருத்து |Time ripe for paternity leave legislation in pvt sector: HC


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி, `நீதி சாஸ்திரத்தில் ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது துணையாக இருப்பவர், அறிவு அளிப்பவர், உணவு வழங்குபவர், பயத்தில் இருப்பவர்களைப் பாதுகாப்பவர் ஆகிய அனைவருமே தந்தையாகக் கருதப்படுகிறார்கள்.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக மனைவியின் மகபேறு காலத்தில் தந்தைக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்ற கருத்து பேசப்பட்டு வருகிறது. குழந்தை பிறக்கும் போது தாய், தந்தை இருவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்பது பல நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு.

இந்தியாவில் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, குழந்தை பெறும்போது தந்தையருக்கு விடுப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால் Central Civil Services (Leave) Rules, 1972-ல் மகபேறு காலத்தில் தந்தைக்கும் விடுப்பு வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது, ஆனால் தமிழ்நாடு உள்பட இது எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை.

மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனி சட்டம் உருவாக்கப்படுவது அவசியமாக உள்ளது, இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பொறுப்புள்ள தந்தையாகச் செயல்பட்டுள்ளார். அதனால் அவருக்கு விளக்கம் கேட்டு வழங்கப்பட்ட அழைப்பாணை ரத்து செய்யப்படுகிறது, மேலும் அவர் கடையம் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாகப் பணியில் சேர உத்தரவிடப்படுகிறது’ என தீர்ப்பளித்துள்ளார். மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *