மாநகராட்சி அலுவலர்களோ, “பழங்காநத்தம் முதல் ஜெய்ஹிந்துபுரம் வரை கழிவு நீர் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதாள சாக்கடைக் குழாய் சேதமடைந்து கழிவு நீர் நீரேற்ற நிலையத்திற்கு செல்லாமல் வெளியேறி சாலையில் தேங்கியது. அதை தினமும் லாரிகள் மூலம் உறிஞ்சி எடுக்கபட்டு வருகிறது. அதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகிறது” என்று தெரிவித்தனர்.


மக்கள் பிரச்னைக்காக போராட்டம் நடத்துது ஒருபக்கம் இருந்தாலும் திமுக கவுன்சிலர்களை மேயர் தரப்பு சரியாக கவனிப்பதில்லை, மதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு பெரும்பாலான கவுன்சிலர்களால் வைக்கப்பட்டு வருகிறது. அதுவும் இதுபோன்ற போராட்டங்களுக்கு காரணம் என்று திமுகவினரால் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் மேயரை எதிர்த்து போராட்டம் நடத்திய கவுன்சிலர் லக்சிகா ஸ்ரீ குறித்து மேயர் இந்திராணி தரப்பினர் மாநகரச் செயலாளர் கோ.தளபதி மூலம் தலைமையில் புகார் செய்துள்ளதாக சொல்கிறார்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com