தபால் துறை புதிய விதிகள்!… இனிமேல் 3 பேர் இணைந்து கூட்டு கணக்கை தொடங்கலாம்!… மத்திய அரசு! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (திருத்தம்) திட்டம் 2023ன் கீழ், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு தொடர்பான 3 முக்கிய விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது.

ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளும் வகையில் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு (திருத்தம்) 2023 திட்டம் கடந்த ஜூலை 3ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றங்களைத் தெரிந்துகொள்வது அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் கட்டாயமாகும். அந்தவகையில், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (திருத்தம்) திட்டம் 2023ன் கீழ், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு தொடர்பான 3 முக்கிய விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. அதில், கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், திரும்பப் பெறுதல் மற்றும் வட்டி செலுத்துதல் தொடர்பான விதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கணக்கு வைத்திருப்பவர்களின் வசதிக்காக புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்: மத்திய அரசு தபால் அலுவலக கூட்டு சேமிப்பு கணக்குதாரர்களின் வரம்பு உயர்வில் கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. விதிகளின்படி, இதுவரை 2 பேராக இருந்த கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை, தற்போது மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது 3 பேர் இணைந்து அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.

சேமிப்புக் கணக்கிலிருந்து திரும்பப் பெறும் விதியில் மாற்றம்: அஞ்சலக சேமிப்புக் கணக்கு திரும்பப் பெறுவதற்கான படிவத்தை மாற்றும் படிவம் 2ல் இருந்து படிவம் 3க்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த மாற்றத்தால் பாஸ்புக்கைக் காட்டி கணக்கில் இருந்து குறைந்தது ஐம்பது ரூபாய் எடுக்கலாம். அஞ்சலக சேமிப்புக் கணக்குத் திட்டம் 2019ன் படி, கணக்கிலிருந்து குறைந்தபட்சம் ஐம்பது ரூபாயை எடுக்க, படிவம்-2 உடன் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட பாஸ்புக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது முதல் விதி.

கணக்கில் வைப்புத்தொகைக்கான வட்டி: அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை செலுத்துவதில் புதிய விதிகளின்படி, பத்தாவது நாள் மற்றும் மாத இறுதிக்குள் ஒரு கணக்கில் குறைந்த தொகைக்கு ஆண்டுக்கு 4% வட்டி அனுமதிக்கப்படும். கணக்கீடு செய்த பிறகு, ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அது கணக்கில் வரவு வைக்கப்படும். அதே சமயம், கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அந்தக் கணக்கு முடிந்த மாத இறுதியில் மட்டுமே அவரது கணக்கில் வட்டி வழங்கப்படும்.

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *