நாள்தோறும் நம்முடைய செய்தி நிறுவனத்தில், பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு இருக்கின்றோம். அதன்படி, இன்று சென்னை பல்கலைக்கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சென்னை பல்கலைக்கழகம் தற்போது ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த பல்கலைக்கழகத்தில் research associate,research, assistant பணிகளுக்கு மூன்று காலி பணியிடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் மட்டும் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 20,000 ரூபாய் முதல் 30,000 வரையில் ஊதியமாக வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றால், நிச்சயம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், MSc பட்டம் பெற்றிருப்பது முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள், நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமாக இருக்கும் நபர்கள், என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, வரும் 6.10.2023 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் பங்கேற்றுக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி
Publisher: 1newsnation.com