சந்திராயன்-3 செயல்பாடு திருப்திகரமாகவும், சீராகவும் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாளை நிலவில் சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரை இறங்க உள்ளது விக்ரம் லேண்டர்.
இஸ்ரோ வெளியிட்ட குறிப்பில் “சந்திராயன்-3 பணி திட்டமிட்டபடி உள்ளது. அமைப்புகள் வழக்கமான சோதனைகளுக்கு உட்பட்டுள்ளன. சீரான படகோட்டம் தொடர்கிறது. மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளக்ஸ் (MOX) ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் இருக்கிறது. சந்திராயன்-3 நிலவில் தரை இறங்குவதை நாளை மலை 5.20 மணி முதல் நேரடி ஒளிபரப்பை காணலாம்.
மேலும் ஆகஸ்ட் 19, 2023 அன்று சுமார் 70 கிமீ உயரத்தில் இருந்து லேண்டர் பொசிஷன் டிடெக்ஷன் கேமரா (LPDC) மூலம் எடுக்கப்பட்ட நிலவின் படங்கள் இங்கே உள்ளன. LPDC படங்கள் லேண்டர் தொகுதிக்கு அதன் நிலையை (அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) நிர்ணயம் செய்வதன் மூலம் அவற்றை உள் நிலவு குறிப்பு வரைபடத்துடன் பொருத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஜூலை 14 அன்று சந்திரயான்-3 விண்கலம், நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் தென் துருவத்தை ஆராயும் நோக்கில் விண்ணில் ஏவப்பட்டது. அதன் பயணத்தின் நிறைவாக, ஆக.23 அன்று மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவின் பரப்பில் இறங்க உள்ளது என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்க சாதகமான சூழல் இல்லை என்பதால் ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரோவின் அகமதாபாத் இயக்குனர் நேற்றைய தினம் தகவல் தெரிவித்தார், இந்நிலையில் சந்திராயன்-3 செயல்பாடு திருப்திகரமாகவும், சீராகவும் உள்ளதால் நாளை திட்டமிட்டபடி 6.04 மணிக்கு நிலவில் தரை இறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
Next Post
Tue Aug 22 , 2023
தூத்துக்குடி அருகே, தன்னுடைய காதலியை சந்தித்து, அவருக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்துவதற்காக ஓடோடி வந்த காதலனை பெண்ணின் உறவினர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குளத்தூர் சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (28) கோவையில் இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் […]

நன்றி
Publisher: 1newsnation.com