
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
பஹாமாஸில் உள்ள சிறிய மற்றும் வெறிச்சோடிய தீவான கே சாலில் மூன்று நாட்களாக சிக்கித் தவித்த நபர் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மீட்கப்பட்டார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்கு பகுதியில் பஹாமாஸ் உள்ளது . தீவு நாடானபஹாமாஸில் உள்ள சிறிய மற்றும் வெறிச்சோடிய தீவான கே சாலில் மூன்று நாட்களாக சிக்கித் தவித்த நபரை அமெரிக்க கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கே சால் என்பது புளோரிடா, கியூபா மற்றும் பஹாமாஸ் இடையே அமைந்துள்ள கே சால் வங்கிக்குள் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும்.64 வயது நிரம்பிய பஹாமாசைச் சேர்ந்தா அந்த நபர் பாய்மரப் படகில் கடற்பயணம் மேற்கொண்டபோது, படகு பழுதடைந்து கேசால் தீவில் தரைதட்டி நின்றுவிட்டது, அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தவித்தார். அத்துடன், அவசரகால சூழ்நிலைகளில் உதவிக்கு அழைப்பதற்காக பயன்படுத்தப்படும் தீயையும் அவ்வப்போது எரியவிட்டார்.
இவ்வாறு மூன்று நாட்கள் ஆன நிலையில் அந்த வழியாக அமெரிக்க கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் ரோந்து சென்றபோது, படகில் இருந்து வெளிப்பட்ட சிவப்புநிற ஒளியை பார்த்து, யாரோ உதவிக்கு அழைப்பதை அறிந்தனர். உடனடியாக தகவல் தொடர்பை ஏற்படுத்தி அவரை மீட்ட கடலோர காவல் படையினர்,ராயல் பஹாமாஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். அவரது உடல்நிலை சீராக இருந்ததாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
“இந்த மனிதனின் உயிரைக் காப்பாற்றியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று கடலோரக் காவல் துறையின் முக்கிய மேற்குக் கண்காணிப்பாளரான தேவ் கிரேக் கூறினார்.
The post ஆள் நடமாட்டமில்லாத தீவில் சிக்கிய நபர்..! படகு கோளாறால் 3 நாட்கள் பரிதவிப்பு… appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
