சாதி வேறுபாடு இன்றி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் நோக்கில், திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து பல்வேறு கோவில்களில் ஆகமம் படித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. கோயில் நிர்வாக அதிகாரியின் அறிவிப்பை எதிர்த்து கோயிலின் குருக்கள் முத்து சுப்ரமணியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆகம பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக தேர்வகலாம் என தீர்ப்பு அளித்து, குருக்கள் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Next Post
Tue Aug 22 , 2023
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவம் உள்ளார். இவரது மகன் சங்கருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மனோலியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது தம்பதிக்கு ஒன்றைரை வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் மனோலியா சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது கணவர் சங்கர், […]

நன்றி
Publisher: 1newsnation.com